MAHESH R
ARS TRAFFIC & TRANSPORT TECHNOLOGY
விதவை தாய்
நதியின் ஒரு கரையின் ஓரத்தில்-
குழப்பம் இருள் சூழ ,
தனிமையில் வீற்றிருந்தாள்!
சேலை வைத்து மறைத்த உருவமொன்று-
அவள் இடுப்பினில் கணகணக்க,
வாழ்வில் இனியாவது நல்லதொன்று நேருமென்று
எண்ணியே நெகிழ்ந்திருந்தாள்.
"வெறும் கஞ்சிக்கிங்கு வழியில்ல,
கண் சொருக நேரமில்ல...
காட்டுக்குள் மாடு மேய்ப்பவளுக்கு-
இது ஒன்றும் புதிதல்ல! "
வெறிச்சோடி நின்றவளை,
மாலை காற்று தழுவி அணைக்க,
சிவந்த கண்களின் நீரை-
வெகு நேரம் ஆரவிட்டாள்.
"கையில் அஞ்சு காசு இல்ல,
பிள்ளைக்கு கொடுக்க உணவுமில்ல,
நித்தமும் பசியோடு போரிட்டவளுக்கு -
கண்ணீருக்கு பஞ்சமென்ன
அவள் தெய்வமும் தான் மறந்ததென்ன!"
தாயின் சோகம் புரிந்தவனாய்,
புன்னகைத்து அவள் மார்போடு அணைத்துக்கொள்ள,
புன்னகை சாயத்தை பூசிக்கொண்டு
தன்னம்பிக்கையோடு புறப்படுகிறாள்...
மறு கரை சேர்ந்தாவது-
பழம் கசப்பு மறையுமென்று
நினைத்தவளாய் நடைபோடுகிறாள் -