Linse antony
UST Global
கடவுளும் கப்பலும்
நாட்டின் சுதந்திரதினம்
பாரதம் மூவண்ணத்தால் ஜொலிக்க
கார்மேகம் புடைசூழ, இருண்டது கேரளம்
சிரித்தான் சிறுவன்
மழை எனது தோழன்
இருளை விலக்க பகலில் வெடித்தான் மத்தாப்பு
தோழன் நனைத்தான் அணைத்தான்
காணாமல் போனது அவன் சிரிப்பு
மழை நீர் காலில் பட
தயாரானான் கப்பல் செய்ய
தண்ணீரில் ஒரு கப்பல் பூக்களம்
வெள்ளம் சூழ்ந்தது கப்பல் கவிழ்ந்தது
வீட்டில் தனியே அவனும், சூழ்ந்த தண்ணீரும்
தந்தையும் இல்லை தாயும் இல்லை
மிதந்தது இருக்கை, கழுத்தை தொட்ட தண்ணீர்
மணித்துளியில் மரணம், கை மட்டும் மேலே
நிற்க துடித்த இதயம்,
கை குலுக்கினார் கடவுள்
உயிர் வந்தது, உறவு தெரிந்தது
முற்றதில் கடவுளும் கப்பலும்!!!