Siva Praboth M S
SunTec Business Solutions
Maganey O Maganey (மகனே ஓ மகனே)
மகனே ஓ மகனே !!
என் கண்கள் இருளுதடா,
இதயம் துடிக்க மறக்குதடா,
நீ இல்ல நிமிடம் கூட,
வாழ்க்கை வாழ மறுக்குதடா.
உன் வழியில் குழி தோண்டி,
நம் வாழ்க்கைப் பள்ளம் ஆனதடா,
அகழ்வாரைத் தாங்கும் நிலம்,
அவர் மகனைத் தாங்காததேனடா ?
காற்றில்லா ஆழ்துளைக்குள்ளே,
கதிரில்லா சிறு வழிக்குள்ளே,
இருள் பொறுத்த , வலி பொறுத்த,
பசி பொறுத்து, மூச்சடக்கி உயிர் புடிச்ச;
உனக்காக வரம் கேட்டேன்,
உயிர்ப் பிச்ச தரக் கேட்டேன்;
ஆண்டவன் கை விட்டான்,
நாட்டை-ஆண்டவனும் கை விட்டான்.
பசியெடுத்து வாடையிலே,
கூறிருட்டு மூடயில,
நினைவிழந்து போகையில,
என பத்தி என்ன நெனச்ச ?
இரண்டகம் செஞ்சவனு வஞ்சினியா?
நம்பிக்கைத் துரோகினு வஞ்சினியா?
கண்டிப்பா வருவானு நம்புனியா !
அரவணைக்க மாட்டாளானு வெதும்பினியா !
பால் கொடுத்த மார் எனக்கு,
பாரமாகிப் போனதையா !!
நீ படுத்த அடி வயிறோ,
அனலாய் எரிக்குதய்யா !!
புகழ்பெற்று நீ விளங்க,
மனசார ஆசைப்பட்டேன்;
ஊரெல்லாம் வாசகமாய்,
உன் மரணச் சேதி பரவுதய்யா.
அம்மானு என்னை அழைக்க,
ஓடி வந்து அரவணைக்க ,
என் கண்ணின் நீர் துடைக்க,
உறவொன்னு கெடச்சிருமோ !!
எரிதணலில் வெந்தாலும்,
உன் நினைவுகள் அழிஞ்சிருமோ?
நினைவுகளோடு வாழ்ந்தால்,
நாட்கள் நகர்ந்திடுமோ?
மகனே ஓ மகனே!!