Gughan Govindasamy
Infosys
வேனிற்கால காயங்கள்
ஊடல் மிஞ்சும்
உறக்கங்கள் அஞ்சும்
நடுங்கும் இரவுகள்
யுகமாய் நகருதே
சுகமாய் எரியுதே..
வேனில் மாலை
வீணாகும் வேளை
நீயென் அருகிலே
கனவாய் விழியிலே
கனமாய் விழுந்ததேன்..
வேரெல்லாம் விஷமாக
என் காதல் பூக்கள் பறித்து
நீ போனாய்..
தரையெல்லாம் தேளாக
என் நெஞ்சின் சிறகை முறித்து
நீ போனாய்..
பருகி இரசித்த இதழ்கள் தவிக்கும்
எந்த முத்தம் இனிக்கும் இனி தேனாய்
இறுகி வெடித்த காதல் தேடி
என் நாட்கள் போகும் வீணாய்...
நில் என்று நீண்டு ஒலித்த
என் மௌனத்தின் இரைச்சலை
கேட்கவில்லையோ நீ
செல் என்று சொன்ன பிறகும்
நீ திரும்பிட விரும்பிய
காயம் நியாயமோடி?