Gopalakrishnan
Infosys
பெண் மீன்
சமுத்திரம் எல்லையென சுதந்திரமாய் சில,
சிறியதொரு கிண்ணத்தில் சிறைப்பட்ட சில,
பசிக்கும் ருசிக்கும் பலியான சில,
பண்பை மறந்து பசியாறிய சில,
கண்ணீர் மறைக்க தனிமையில் சில,
கவலை மறந்து கூட்டமாய் சில,
அழகு நிறைந்த சிலையென சில,
அன்பின் உருவாய் அவதரித்த சில,
வேற்றுமைகள் பலவாயினும்
சில ஒற்றுமைகளும் உண்டல்லவா?
மீன்களுக்கும் பெண்களுக்கும்!