Skip to main content
Srishti-2022   >>  Poem - Tamil   >>  என் நகல் !!!

Siva Praboth M S

SunTec Business Solutions

என் நகல் !!!

என் உயிரின் நகல், நீதானடி !

உன் கைப்படும் சிறுதுளி, அமுதமடி !

 

உன் நிழல் அழுதாலு ம் நோகுதடி,

என்றும் புன்னகை மட்டும், நீ சூடடி.

 

ஆயிரம் ஜென்மங்கள் வாழ்வோமடி 

என் பகல், நிலா, மழை நீ தானடி !

 

ஆம் என்ற வார்தை ஒன்று, நீ கூறடி, 

என்றும் உன் தந்தை, நான் தானடி !

 

அது-இது வேண்டும் என்று, நீ அடம் பிடி, 

உன்னிடம் மண்டியிட்டு, நான் தோற்பேனடி!

 

கொஞ்சலுடன் அழுகையும், கலந்து தா !

உன் கூந்தலிலே மல்லிகைப் பூச்சூடவா !

 

சல்-சல், சல்-சல் என்று கொலுசுடன் வா !

ஸப்த ஸ்வரங்களுடன், புது விடியல் தா !

 

என் கை பிடித்தே, நீ நடந்திடடி ! 

உன் வழியில் வெளிச்சம், நான் தருவேனடி !

 

நாட்டியம் செய்திடு, பார்வையிலே,

என்னை பைத்தியமாக்கிடு, கொஞ்சலிலே !

 

வீட்டினுள் கோலமிடு, உன் பாதையாலே !

பூக்களை பதித்திடு, உன் ஸ்பரிஸத்திலே !

 

அறுசுவை விருந்துதா ! உன் கையாலே,

என் வீட்டினில் சிற்பம் செய், சேற்றாலே ! 

 

சாரலுடன் தென்றல், உன் சிணுங்கலிலே

தாளத்துடன் நடனம், உன் கோபத்திலே

 

சுவற்றினில் சித்திரம் பல, உன் கிறுக்கலிலே

வீட்டினில் இடம் உண்டு, நிறுத்தாதே !

 

நான் பெற்ற இன்பம் ஒன்றும், போதாதடி !

நீ தரும் போதை இன்னும், வேண்டுமடி ! 

 

நம் நினைவுகள் என்றும், அழியாதடி ! 

உதிராது ஒவ்வொன்றாய் நான், கோர்பேனடி !!