Siva Praboth M S
SunTec Business Solutions
என் நகல் !!!
என் உயிரின் நகல், நீதானடி !
உன் கைப்படும் சிறுதுளி, அமுதமடி !
உன் நிழல் அழுதாலு ம் நோகுதடி,
என்றும் புன்னகை மட்டும், நீ சூடடி.
ஆயிரம் ஜென்மங்கள் வாழ்வோமடி
என் பகல், நிலா, மழை நீ தானடி !
ஆம் என்ற வார்தை ஒன்று, நீ கூறடி,
என்றும் உன் தந்தை, நான் தானடி !
அது-இது வேண்டும் என்று, நீ அடம் பிடி,
உன்னிடம் மண்டியிட்டு, நான் தோற்பேனடி!
கொஞ்சலுடன் அழுகையும், கலந்து தா !
உன் கூந்தலிலே மல்லிகைப் பூச்சூடவா !
சல்-சல், சல்-சல் என்று கொலுசுடன் வா !
ஸப்த ஸ்வரங்களுடன், புது விடியல் தா !
என் கை பிடித்தே, நீ நடந்திடடி !
உன் வழியில் வெளிச்சம், நான் தருவேனடி !
நாட்டியம் செய்திடு, பார்வையிலே,
என்னை பைத்தியமாக்கிடு, கொஞ்சலிலே !
வீட்டினுள் கோலமிடு, உன் பாதையாலே !
பூக்களை பதித்திடு, உன் ஸ்பரிஸத்திலே !
அறுசுவை விருந்துதா ! உன் கையாலே,
என் வீட்டினில் சிற்பம் செய், சேற்றாலே !
சாரலுடன் தென்றல், உன் சிணுங்கலிலே
தாளத்துடன் நடனம், உன் கோபத்திலே
சுவற்றினில் சித்திரம் பல, உன் கிறுக்கலிலே
வீட்டினில் இடம் உண்டு, நிறுத்தாதே !
நான் பெற்ற இன்பம் ஒன்றும், போதாதடி !
நீ தரும் போதை இன்னும், வேண்டுமடி !
நம் நினைவுகள் என்றும், அழியாதடி !
உதிராது ஒவ்வொன்றாய் நான், கோர்பேனடி !!