Linse Antony
UST Global
உள்ளே வெளியே
காலை நேரம், இன்றய நிகழ்வுகளை காணும் ஆவலோடு பரபரப்பான அந்த சாலையின் ஓரத்தில் நடந்துகொண்டிருந்தேன். எவ்வளவு தூரம் நடந்தேனோ தெரியவில்லை களைத்து போனேன். சற்று ஓய்வுஎடுக்க ஒரு மரநிழலில் அமர்ந்து நகரத்தின் அழகை ரசித்தேன்.
களைப்பால் கண்ணயர்ந்த நான் விழித்துப் பார்த்தபோது, அருகில் ஒருவர் என்னையே உற்று பார்த்துக்கொண்டிருந்தார். மொட்டை அடித்து பார்ப்பதற்கு ஒரு பிச்சக்காரனைப்போல் தோற்றம். சிறிது நேரம் என்னை பார்த்த அவர் கேட்டார் " என்ன? என்னமாதிரியே ஊர சுத்தி பார்க்க வந்தியா? பதிலேதும் சொல்லாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன்.
அவர் மீண்டும் எதோ சொல்ல முயற்சிக்க, திடிரென பின்னால் இருந்து ஒருஅலறல் சத்தம். அது ஒரு பெண்ணின் குரல். தன்னுடைய கைபையை பறித்துகொண்டு ஓடிய திருடனின் பின்னால் "திருடன் திருடன் " என கத்திகொண்டே ஓடினாள். சிறிதும் யோசிக்காமல் என் அருகில் இருந்தவர் அவளுடன் சேர்ந்து திருடனை துரத்த ஆரம்பித்தார்.
ஒன்றும் புரியாமல் நான் அவர்கள் பின்னால் ஓடினேன். சிறிது நேரத்தில் அவர்திருடனை துரத்திப்பிடித்தார். இருவரும் புரண்டு புரண்டு சண்டை போட்டதை என்னோடு சேர்ந்து அக்கம் பக்கத்திலிருந்து பலரும் வேடிக்கை பார்த்தனர். அவரின் முரட்டு தாக்குதலை சமாளிக்க முடியாத திருடன் கைப்பையை கீழேபோட்டுவிட்டு தப்பி ஓடினான். கைப்பையை எடுத்து அதை பத்திரமாக அந்தபெண்ணிடம் கொடுத்தார். கண்ணீருடன் அதை பெற்றுக்கொண்ட அந்த பெண்அவருக்கு நன்றி சொல்லி விடை வாங்கினார்.
தலையில் ரத்தம் கசிந்துகொண்டிருந்தது, அதை துடைத்து விட்டு அவர்அருகில் இருந்த குழாயில் தண்ணீர் அருந்தினார். ரத்தம் சிறிதாய் நிற்கத்துவங்கியது. பின்னர் சிறிது நேரம் அவர் நடக்க அவர் பின்னல் நானும்நடந்தேன். இருவரும் ஒரு கான்கிரீட் இருக்கையில் அமர்ந்தோம். எங்கள் அருகில் கைபேசியில் பேசிக்கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவன் அவரைபார்த்தவுடன் மெதுவாக நகர்ந்து சாலையை கடக்க முயன்றான். ஆச்சரியத்தில் நாங்கள் அந்த மாணவனை பார்த்தோம். ஏன் எங்களைப் பார்த்ததும் எழுந்தான் என்று யோசிப்பதற்குள் ஒரு கார் மாணவன் மேல் மோதி அவன் தூக்கிவீசப்பட்டான். கார் நிறுத்தாமல் பறந்தது. ஒரு நொடியில் மாணவனின்வெள்ளை ஆடை சிகப்பாய் மாறியது. சாலையில் இரத்தம் கோலமிட்டது.
இரத்த வெள்ளத்தில் மிதந்த அவனை காண கூட்டம் அலைமோதியது . சிலர்புகைப்படம் எடுக்க , வேறு சிலர் நேரலையில் சமூக வலைத்தளத்தினுள் பதிவிட்டுக்கொண்டிருந்தனர். இன்னும்சிலர் அவனுக்காக பரிதாபப்பட்டு பேசிக்கொண்டிருந்தனர் . யாரும் அவனை மருத்துவமனை கொண்டு செல்லும் எண்ணத்திலில்லை . இந்த காட்சியை பார்த்த நாங்கள் ஆச்சர்யப்பட்டோம். என்ன மனிதர்கள் இவர்கள் !!!
கூட்டத்தை விலக்கிய அவர் அவனை சுமந்து ஒரு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்குகொண்டு சென்றார். இதை எல்லாம் பார்த்து செய்வதறியாமல் நான் கூட்டத்தை பார்த்தேன். நேரலையை முடித்து கொண்டு கூட்டம்கலைந்தது. சாலையில் நானும் ரத்தமும். என்னால் ஒன்றும் செய்யமுடையவில்லையே என்ற கவலையில் நான் அவர் வருகைக்காக காத்திருந்தேன்.
ரத்தம் காய்ந்தது, சூரியன் அஸ்தமிக்கும் நேரம் நெருங்கியது. அவரை காணவில்லை. என்ன ஆனது என்று தெரியாமல் நான் வேதனையுடன் நடக்கத்துவங்கினேன்.
அழகான கடற்கரையில் ஒரு பக்கம் குழந்தைகள் விளையாட மறுபக்கம்காதல் ஜோடிகள் அலைகளை ரசித்தனர் .
நான் அவர்களை ரசித்தேன். தூரத்தில்ஒருவர் கறை படிந்த சட்டையுடன் என்னை பார்த்து கையசைத்தார். நான்பார்த்த ஒரேயொரு நல்லவர். அவரை கண்ட நான் சந்தோஷத்தில் அவர் அருகேசென்றேன். அவர் என்னை பார்த்து ஏளனமாய் சிரிக்க, அவர் முகத்தைபார்க்கமுடியாமல் தலைகுனித்தேன் . அதே ஏளனச்சிரிப்புடன் அவர் என்னைபார்த்து சொன்னார் "உன்னை சொல்லி குத்தமில்ல, அவர்களோடு சேர்ந்து நீயும் இப்படி ஆகிட்ட , இங்கே உயிருக்கும், உணர்வுக்கும், உறவுக்கும் மதிப்பில்லை. மனிதன் இயந்திரமாகிவிட்டான் " .
அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த என்னை யாரோ சிலர் எட்டி உதைத்தனர். வலியில் கத்திய நான் என்ன நடக்கிறது என்று அறியாமல் அவர்களை பார்த்தேன் . வெள்ளை சீருடையில் வந்த சிலர் அவரை பார்த்து "உன்ன எங்கேல்லாம் தேடுறது, எங்க பொழப்ப கெடுக்குறதுக்குன்னே வந்திருக்கபாரு , ஏறு வண்டில" என்று, அவர்கள் சங்கிலி இட்டு வண்டிக்குள் இழுத்துதள்ளினர். ஜன்னல் ஓரமாய் நின்ற அவர் என்னை பார்த்து ' இவர்கள் எனக்குவைத்திருக்கும் பெயர், பயித்தியக்காரன்!!!. இங்கே நல்லவனாய் வாழ்ந்தால் உனக்கும் அந்த பெயர் கிடைக்கும் ஓடிவிடு' என்றார். ஜன்னல் கதவு மூட , வாகனம் வேகமாய் கிளம்பிச் சென்றது.
இங்கே இருப்பதற்கு, பைத்தியமாகவே இருப்பது மேல். நானும் அவரைத்துடர்ந்தேன் காரணம் 'நன்றி மறப்பதற்கு நான் மனிதனல்ல. நான் நாய்!!!'